வெள்ளி, 19 அக்டோபர், 2012

ஒரு வாசகரின் கடிதம்

---------- Forwarded message ----------
From: KRISHNA MOORTHI <tnkeealhw@yahoo.co.in>
Date: 2009/4/3
Subject: Response to "Unarvaruvi"



அன்பரே...
 
உங்கள் கவிதை கடல் கடந்து நண்பர் போதகர் அருள்தாஸ் மூலம் கிடைத்தது.. முன்னுரையை நான் எப்பொழுதும் கடைசியில் தான் படிப்பேன். ஆனால் உங்களின் முன்னுரையே முன்னூறு கவிதைக்குச் சமம்.
 
நல்ல சிந்தனை என்பது நாம் வாழும் வாழ்வில் இருக்கிறது. உங்களின் வாழ்க்கை இந்நூலில் தெரிகிறது.
 
கடந்த ஆண்டு நண்பர் போதகர் அருள்தாஸின் ஒத்துழைப்புடன் அந்தமான் அலைகள் என்று ஒரு பாடல் குறுந்தகடு வெளியிட்டேன். அதில் பாரதியை மறுபடியு பிறந்து வா அதுவும் அந்தமானுக்கு அந்த பாக்கியம் தா என்றும் பாடல் எழுதிப் பாடியும் இருந்தேன். அதில் நானும் பாரதீ என்று குறிப்பிட்டேன்...
 
என்ன ஒரு ஆச்சரியம் நீங்களும் அதனை சிந்தித்திருக்கிறீர்கள்.
 
வாழ்க உங்கள் தமிழ் பயணம்.
 
உங்கள் கவிதைகளை அந்தமான் இலக்கிய மன்றம் மூலம் இத்தீவு வாழ் தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.
 
உங்கள் அனுமதி கிடைத்தால் இங்கிருந்து வெளிவரும் தமிழ் வார இதழ்களிலும் கவிதைகளை வெளியிட வைக்கலாம்.
 
இத் தீவில் தொலைக்காட்சியில் மரபுக் கவிதை மற்றும் புதுக்கவிதை குறித்து கலந்துரையாடல் நிகழ உள்ளது. அதிலும் உங்கள் கவிதை பற்றி குறிப்பிட உள்ளேன் - உங்கள் அனுமதியுடன்...
 
வாழ்க வளமுடன்

T N Krishnamoorthi                 
9434289673
அந்தமான்